"கடன அடச்ச உடனே கல்யாணம்தான்" - கடன் வாங்கி கொடுத்த 8 லட்சம் - பல்டி அடித்த காதலன்.. 'காளி'யான காதலி

x

திருமணம் செய்துகொள்வதாக கூறி 8 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துவிட்டு, காதலன் கைவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, உடன் பணியாற்றிய சதாம் உசைன் என்ற இளைஞருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் ஒருவரையொருவர் 11 வருடங்களாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் சுமையை காரணம் காட்டி தன்னிடம் இருந்து சிறுக சிறுக பணம் பெற்ற சதாம் உசைன், கடனை அடைத்தால் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறி 8 லட்சம் வரை பணம் பெற்றதாக இளம் பெண் குற்றம்சாட்டியுள்ளார். பணத்திற்கான வட்டியை தானே செலுத்தி வந்த நிலையில், திடீரென தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறிய சதாம் உசைன், தனக்கு ஏற்கெனவே திருமணமானதாக கூறி தனது செல்போன் எண்ணை ப்ளாக் செய்தாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்