"மஞ்சும்மல் பாய்ஸ்" படம் பார்த்து விபரீதத்தில் இறங்கிய இளைஞர் பலி.. 300 அடியில் சடலம்

x

நீலகிரி மாவட்டம் செங்குட்டுவராயன் மலையில், மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணியில் சுற்றுலா சென்ற 10 இளைஞர்களில் ஒருவர் திடீரென மாயமானதும்... பின்னர் 300 அடி ஆழ பள்ளத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு கடந்த 15 ஆம் தேதி 10 இளைஞர்கள் சுற்றுலா சென்றிருக்கின்றனர். மஞ்சும்மல் பாய்ஸ் பட பாணியில் 10 இளைஞர்களும், தடை செய்யப்பட்ட மலை ஏற்றத்திற்குள் நுழைந்து டிரெக்கிங் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மலையில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்ததாகவும், இதனால் இளைஞர்கள் சிதறி ஓடியதாகவும் கூறப்படும் நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது, ஒரு இளைஞர் மட்டும் தங்களுள் காணாததை அறிந்து இளைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார் என்ற அந்த இளைஞரை அவரது நண்பர்கள் மலை முழவதும் கத்தி கூச்சலிட்டு தேடி வந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், டிரோன் மூலம் இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், மலையில் உள்ள பள்ளம் ஒன்றில் 300 அடிக்கும் கீழ் இளைஞர் சடலமாக கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இளைஞரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வரும் நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்