நாட்டை உலுக்கிய மணிப்பூர் கொடூரம்..கண்களை கட்டி கொண்டு SFI-யினர் ஆர்ப்பாட்டம் - சென்னையில் பதற்றம்

x

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னை, மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் 2-வது நாளாக கறுப்புத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டு இருப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர். மணிப்பூரில் பெரிய அளவில் கலவரம் நடைபெறும்போது, அவர்களை அரசால் கைது செய்ய முடியவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்