ஒரு பல்லை பிடுங்க சென்று மொத்த பல்லையும் இழந்த நபர் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சரவணன் என்பவர், கடைவாய் பல் வலி காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் ரோஷன் என்பவர், அவரது பல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முயன்றுள்ளார். அப்போது நடந்த தவறான சிகிச்சையால், சரவணனின் வாயில் 6 முறை அறுவை சிகிச்சை செய்த நிலையில், தற்போது வாயில் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவறான சிகிச்சை செய்ததுடன், அதற்கு கட்டணமாக ஏழரை லட்சம் ரூபாய் பணத்தை கறந்த மருத்துவர் ரோஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சரவணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்