கோயிலுக்குள் அரை நிர்வாணமாக ஆக்ரோஷம்...சூலத்தால் பூசாரியை குத்த வந்த பயங்கரம்...

x

கடலூர் அருகே கோயிலுக்குள் புகுந்த நபர், பூசாரியை கத்தியால் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரை அடுத்த காராமணிக்குப்பத்தில் உள்ள காளி கோயிலுக்குள் நுழைந்த 45 வயது நபர் ஒருவர், கோயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பூசாரியை உள்ளே வரக்கூடாது என கோபமாக கூறினார். அவரை பூசாரி எச்சரித்து அனுப்பி வைக்க முயற்சி செய்தபோது, கோவிலில் இருந்த கத்தி மற்றும் சூலத்தை எடுத்துக்கொண்டு பூசாரியை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி, அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார். இதற்கிடையில் அந்த நபர் கோவில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கத்திக் கொண்டு இருந்தார். தகவல் அறிந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார், அந்த நபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவரைப் பற்றி விசாரித்து, குடும்பத்தினரை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்