நாங்குநேரி சம்பவத்திற்கு முக்கிய காரணம் - வெளிப்படையாக பேசிய அண்ணாமலை

x

தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜாதியை முன்னிலைப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்