ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி விழா - மங்கள வாத்தியங்கள் முழங்க வீதிகளில் உலா

x

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது...

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கிளி, அன்ன வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு மலர்களாலும், தங்க ஆபரணங்களைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சோமஸ்கந்த மூர்த்தி அன்ன வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்....


Next Story

மேலும் செய்திகள்