குளு குளு.. ஏ.சி ஆட்டோ ரைடு மதுரை ஆட்டோ விஞ்ஞானியின் பயணிகளுக்கான புதிய கண்டுபிடிப்பு

x

மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரத்னவேல் பாண்டியன், தனது ஆட்டோவில் மினி ஏசி அமைத்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். 3 மற்றும் 2 இஞ்ச் பைப்புகளை இணைத்து, 300 மில்லி லிட்டர் தண்ணீரை உபயோகப்படுத்தி, வெளிக்காற்றை குளிர்ந்த காற்றாக மாற்றும் வகையில் அமைத்துள்ளார். கோடை காலம் நெருங்கும் நிலையில், பயணிகளை வெயிலின் கொடுமையில் இருந்து பாதுகாக்கவே, நூறு ரூபாய் செலவில் இந்த மினி ஏசியை உருவாக்கியுள்ளதாக ரத்னவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்