மதுரை வந்த வந்தே பாரத் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டிய தமிழிசை

x

மதுரையில் வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்வின்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு, மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, வந்தே பாரத் ரயில் போன்ற கேக்கை மூவரும் இணைந்து வெட்டிய நிலையில், ஆளுநர் தமிழிசை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக்கை ஊட்டினார். தொடர்ந்து அனைவரும் சேர்ந்து கொடி அசைத்து, வந்தே பாரத் ரயிலின் பயணத்தை தொடங்கி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்