சீர்வரிசை பொருட்களை கொடுத்து தலைமை ஆசிரியருக்கு பிரியாவிடை கொடுத்த மக்கள்

x

மதுரை சின்னக்குறவடி கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி பிரியாவிடை கொடுத்து அனுப்பி நெகிழ வைத்தனர் கிராம மக்கள்... வடுகபட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பள்ளியில் பணியாற்றிய நிலையில், அவர் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மாலை கிரீடம் அணிவித்து, தாய் வீட்டு சீதனத்தைப் போல் சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்... மேள தாளத்துடன் முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து அவரது நினைவாக மரக்கன்றுகளை நட வைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்