சிஏஏ போராட்டம்... பாத்திமா சபரிமாலாவுக்கு மறுக்கப்பட்ட பாஸ்போர்ட் - ஒரே உத்தரவில் உடைத்த கோர்ட்

x

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதால் பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த பாத்திமா சபரிமாலா என்பவர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியவர். இவர் காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மதுரை பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவர் மீது சி.ஏ.ஏ, நீட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதால் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் மீது எந்த குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் அவர் கோரிக்கை விடுத்த பெயர் மாற்றத்துடன் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்