தேர்தல் விதிமுறைகள் எதிரொலி... மதுரை மாவட்ட நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு...

x

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைக்க மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 45 காவல்நிலையங்களில் 532 உரிமம் பெற்ற துப்பாக்கிகளும், மதுரை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 30 காவல்நிலையங்களில் 452 உரிமம் பெற்ற துப்பாக்கிகளும் வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 56 துப்பாக்கிகள் வங்கிகள், உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்