பஞ்சாப்பில் இளம் பெண்ணை காப்பாற்றிய மதுரை ராணுவ வீரர்...உணர்ச்சி பொங்க பேசிய தாய்,தந்தை

x

பஞ்சாப் மாநிலத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்ட தமிழக ராணுவ வீரருக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில், அவர் தங்கள் ஊருக்கு பெருமையைத் தேடி தந்துவிட்டார் என பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரை அடுத்த அய்யூரை சேர்ந்த ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனை ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், ராணுவ வீரரை ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், நவநீதகிருஷ்ணன் ஊருக்கு வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்க கிராம மக்கள் தயாராக உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்