சென்னையில் சுதந்திர தினத்தில் அமோகமாக நடந்த மதுவிற்பனை - தீயாய் பரவும் காட்சிகள்

x

சென்னை ராமாபுரத்தில் சுதந்திர தினத்தன்று கள்ளச் சந்தையில் மதுவிற்பனை அமோகமாக நடந்தது. அந்த வழியாக சென்ற நபர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தமிழக காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரை டேக் செய்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சுதந்திர தினத்தன்று தமிழக அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்தநிலையில் சமூக விரோதிகள் சிலர் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்