காதலர் தினத்தில் மனைவி இறந்து விட்டதாக நினைத்து உயிரை மாய்த்த கணவன்

x

திருப்பூர் அங்கேரிபாளையம் அருகேயுள்ள வேலன்நகரில் வசித்து வந்த தம்பதி செல்வம் - தீபா. இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒருவர் உள்ளார். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்த இருவருக்குமிடையே, காதலர் தினத்தன்று திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், மனைவியை சரமாரியாக செல்வம் தாக்கியதால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதில், மனைவி உயிரிழந்து விட்டதாக நினைத்த செல்வம், மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபாவையும், அவரது கணவரின் சடத்தையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபாவும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்