முன்னாள் காதலியிடம் இருந்து வந்த போன் - உடனே சென்ற இளைஞர்... கடைசியில் Ex Lover வைத்த ஆப்பு

x

முன்னாள் காதலியை பார்க்கச் சென்ற இடத்தில், ஐ.டி. ஊழியரை அடைத்து வைத்து நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், முன்ளாள் காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் காதலி பூவிதா என்ற பெண் அழைத்தன் பேரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த பூவிதாவின் தற்போதைய காதலன் ஏழுமலை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, விக்னேஷிடம் இருந்த வெள்ளி செயின் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்