2 குழந்தைகளின் தாயிக்கு 'லவ்' டார்ச்சர்- த*கொலைக்கு முயன்ற பெண் -அண்ணனுக்கு BP ஏத்திய விபரீத ஆடியோ

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தன்னை ஒரு தலையாக காதலித்து வந்த இளைஞர், திருமணத்திற்கு பிறகும் தனக்கு தொல்லை கொடுப்பதாக கூறி காவல் நிலையத்தில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தக்கலை அருகே வசித்து வரும் பெண் ஒருவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருவாதாங்கோடு பகுதியை சேர்ந்த சுகைல் என்ற இளைஞர், திருமணமான அப்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் அவருக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில், கடந்த 12 ஆம் தேதி போன் செய்து இளைஞர் தொந்தரவு செய்ததால், மன உளைச்சல் அடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை, இளைஞரே அப்பெண்ணின் சகோதரருக்கு போன் செய்து கூறி பெண்ணை காப்பாற்றியதும் குறிப்பிடத்தக்க நிலையில், அதன் செல்போன் ஆடியோவும் இணையத்தில் வைரலானது.


Next Story

மேலும் செய்திகள்