சினிமாவை மிஞ்சிய லாரி சேஸிங்..! சுங்கச்சாவடியை அடித்து தூக்கிய இளைஞன்.. மடக்கி பிடித்த மதுரை போலீஸ்

x

மதுரை மாவட்டம் கப்பலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியை, இளைஞர் ஒருவர் கடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கப்பலூர் சுங்கச்சாவடியில் நின்றிருந்த சரக்கு வேன் மீது மோதி தள்ளிவிட்டு, கண்ட்யெனர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். திருமங்கலம் போலீசார் அளித்த தகவலின் பேரில், விருதுநகர் அருகே கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கிப் பிடித்து இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் லாரியை கடத்திய நபர் கோவையை சேர்ந்த விஜய் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தார் கூறியதாகவும் தெரியவந்துள்ளது. விருதுநகர் போலீசார் இளைஞரை திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடியில் சரக்கு வேன் மீது கண்டெய்னர் லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன



Next Story

மேலும் செய்திகள்