"நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு.." வாயிலும், நெஞ்சிலும் அடித்து கதறிய மூதாட்டிகள்- பரபரப்பு காட்சி

x

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து 600வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

கிராமப் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று விவசாய நிலங்களில் இறங்கி கதிர் வந்து அறுவடைக்கு தயாராகி வரும் கழனியில் உள்ள நெற்பயிர்களைக் கட்டி அணைத்து கதறி அழுது ஆர்ப்பாட்டம் நடத்தினர்... கிராம மக்களின் போராட்டத்தை ஒட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இனி சட்டப்போராட்டத்தைக் கையில் எடுக்க உள்ளதாகவும், பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் போராட்டக்குழு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்