நெருங்கும் தேர்தல்.. பறக்கும் படை களத்தில் இறங்கியதும் கட்டு கட்டாக சிக்கிய பணம்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 6 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் சாலை ரவுண்டானா, தென்பரை, உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது காரில் கொண்டு வந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டு கோடியே 24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்த தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்