சிக்கிய ரூ.4 கோடி... யாருக்காக கொண்டு செல்லப்பட்டது..? நயினார் உறவினர் பரபரப்பு வீடியோ...

x

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர் முருகன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சூழலில், தற்போது முருகன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மணிகண்டன் என்பவர் கூறியதன் பேரில் பெருமாள் என்பவரை தான் அனுப்பி வைத்ததாகவும், அவர் பணத்தை திருநெல்வேலிக்கு கொண்டு செல்வதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்