`சுவிட்ச்'சால் பறிபோன உயிர் - நெல்லையில் பயங்கரம்

x

நெல்லையில் அதி கனமழை பெய்த நிலையில் சிந்து பூந்துறையை வெள்ளம் சூழ்ந்தது... மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில், மழை வடியத் துவங்கியதால் ஒவ்வொரு பகுதிகளாய் மின்சார விநியோகம் துவங்கியது... இந்நிலையில் சிந்து பூந்துறையைச் சேர்ந்த 52 வயது ஆறுமுகம் என்ற பிரிண்டிங் பிரஸ் தொழிலாளி மின்சாரம் வந்ததும் வீட்டில் இருந்த சுவிட்சை ஆன் செய்துள்ளார்... வெள்ளத்தில் சுவிட்ச்சானது சேதம் அடைந்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்... இந்த நிலையில் நெல்லையில் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்