காலை உணவு சமைத்த பட்டியலின பெண்.. குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுத்த பெற்றோர் -திருப்பூரில் அதிர்ச்சி

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த காளிங்கராயன் பாளையத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த பட்டியலின பெண் உணவு சமைத்துள்ளார். இதை அறிந்த சிலர், தங்களது குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காமல், வேறு பள்ளியில் சேர்ப்பதாக கூறி மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால், பெரும்பாலானோர் குழந்தைகளை அனுப்பிய நிலையில், சிலர் அனுப்பவில்லை என கூறப்படுகிறது. மீண்டும் யாராவது இது போன்று வந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்