உணவகங்கள், தாபாக்களில் சரக்கு சேல்ஸ்..! "இனி அவ்ளோதான்..!" அதிகாரிகள் கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்...

x

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யும்பொருட்டு தமிழ்நாடு மதுபானம் விதிகள், 1981-ன் கீழ் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகிறது. அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல் உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளது. மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்