நடுரோட்டில் பிரிந்த இளைஞர் உயிர்-பெரம்பலூரில் பயங்கரம்

x

பெரம்பலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரம்பலூர் அடுத்த குரும்பலூரை சேர்ந்த மதிவாணன் என்ற இளைஞர், ஈச்சம்பட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானார். இதில், மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏறடுத்திய நிலையில், வேன் ஓட்டுநர் ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்