தடை செய்யப்பட்ட இயக்கத்திற்குஆட்கள் சப்ளை? NIA அதிரடி | Lashkar-e-Taiba

x

சென்னை, முத்தையால்பேட்டையில் உள்ள ஹசன் அலி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த நால்வருக்கு சொந்தமான இடங்கள் என இந்தியாவின் 17 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்திற்கு ஆள் சேர்த்தாக நசீர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பெங்களுர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு என்.ஐ.ஏ வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த இயக்கத்திற்கு பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக ஏழு மாநிலங்களில் சுமார் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் சோதனை நடத்தப்பட்டு தொடர்புடையவர்கள் நேரில் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்