என்எல்சிக்கு நில எடுப்பு - அதிகாரியை சிறை பிடித்த மக்கள் நெய்வேலியில் பரபரப்பு

x

நெய்வேலி அருகே தொப்பிலிக்குப்பத்தில் என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு சென்றநில எடுப்பு அதிகாரியை மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொப்பிலிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த என்எல்சி திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து வருகின்றனர். இந்நிலையில், என்எல்சி மற்றும் மாவட்ட நில எடுப்பு அதிகாரி சந்திரா என்பவர். தொப்ளிக்குப்பம் விஏஓவை சந்தித்து நிலம் எடுப்பது தொடர்பாக வரைபடத்தையும் பார்த்துள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அதிகாரியை சிறை பிடித்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் ஒன்று திரண்டு, நிலத்தை எடுக்க விடமாட்டோம் என முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்