"கோயம்பேடு மிகவும் வசதியாக உள்ளது" - பேருந்து பயணிகள் கருத்து

x

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை கோயம்பேட்டிலிருந்து, ஆம்னி பேருந்துகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டன. ஆம்னி பேருந்து நிறுவனங்கள், கோயம்பேட்டிலுள்ள தங்கள் அலுவலகங்களிலிருந்து பேருந்துகளை இயக்கலாம் என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து, ஆம்னி பேருந்துகள் மீண்டும் கோயம்பேட்டிருந்து இயக்கப்பட்டன. இதனையொட்டி ஆம்னி பேருந்து நிர்வாகங்களின் சார்பில், பயணிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. அப்போது பேசிய பேருந்து பயணிகள், 50 சதவீத ஆம்னி பேருந்துகளையாவது கோயம்பேட்டிலிருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்