கூத்தாண்டவர் கோயிலில் இன்று திறக்கும் .. கழுத்தில் ஏற போகும் தாலி

x

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி கண் திறக்கும் நிகழ்வு, இன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள், அரவாண் சாமியை கணவராக பாவித்துக்கொண்டு, கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வர். இதனையடுத்து, நாளை தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரானது, கூவாகம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர், அழிகளம் நோக்கி புறப்படும். அதுவரை ஆட்டமும், பாட்டமுமாக மகிழ்வுடன் இருக்கும் திருநங்கைகள், தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டதும், தாலியை அறுத்துக்கொண்டு விதவை கோலத்தை ஏற்பார்கள்.


Next Story

மேலும் செய்திகள்