சொந்த தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

x

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்... முகாம் அலுவலகத்தில், " உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 2 ஆயிரம் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, உடைகள், பேரீச்சம்பழம், நிதியுதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இஸ்லாமியர்கள் பரிசுத் தொகுப்பிற்கும், அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருவதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு ஆகியோரும் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்