கொடநாடு வழக்கு...மீண்டும் விசாரணையை தொடங்கும் அதிகாரிகள்

x

கொடநாடு வழக்கு தொடர்பாக சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாளையார் மனோஜ், சாயான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஓட்டுநர் கனகராஜ விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என அவரது சகோதரர் தனபால் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்