பிரபல ரவுடி காரில் கடத்தல்..! தலையை வெட்டி வீசிய மர்ம கும்பல்.. காஞ்சிபுரம் கோயில் அருகே பயங்கரம்

x

வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், போதை பழக்கங்களுக்கு ஆளானதுடன் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அஜீத்தை நேற்றிரவு சிலர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் வள்ளுவப்பாக்கம் அருகே ரயில்வே கேட் பகுதியில், அஜீத்தை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்துள்ளனர். பின்னர், துண்டிக்கப்பட்ட தலையை, தாங்கி கிராமத்தில் உள்ள கோயில் அருகே வீசி சென்றுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடலையும், தலையையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், திம்மராஜாம் பேட்டையைச் சேர்ந்த விக்கி, கரசங்கால் பகுதியைச் சேர்ந்த பிரபாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்