நெருப்பால் வந்த வினை! - ஓய்வு பெற இருந்த நிலையில் நடந்த சோகம்..அந்நியமாக பறிபோன உயிர்

x

விவசாய தோட்டத்தில் புற்களை அகற்ற தீ வைத்த நபர் எதிர்பாராத விதமாக தீப்பற்றி உயிரிழந்த சோக சம்பவம் கரூரில் நிகழ்ந்துள்ளது. கரூர் மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்த T.வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த மணி மாறன் தனக்கு சொந்தமான2 ஏக்கர் தரிசு நிலத்தில் உள்ள புற்களை அகற்ற தீ வைத்துள்ளார். தோட்டத்தைச் சுற்றி மளமளவென தீ பரவ... வெளியே வர முடியாமல் நெருப்பு வளையத்திற்குள் மாட்டிக் கொண்ட மணிமாறன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். வயலில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்... வரும் 30ம் தேதி இவர் ஓய்வு பெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்