கையில் ரூ. 50,000... பேசும் போதே பரிசு...அறிவித்த பாஜக வேட்பாளர் - அதிரடியாக பாய்ந்த வழக்கு

x

திண்டுக்கல், வேடசந்தூர் அருகே வாக்கு சேகரிப்பின் போது 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டை காண்பித்து பரிசு அறிவித்த கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது... செந்தில்நாதன் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ் கரூர் எம்.பி ஜோதிமணி தொகுதிக்கு என்ன செய்தார் என்று பாஜக அலுவலகத்தில் வந்து கூறினால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக செந்தில் நாதன் அறிவிக்கிறார் என பேசினார். இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் செந்தில்நாதன், கனகராஜ், உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்