"உஷாரா இருங்க மக்களே..!" ATM-ல் பணம் எடுக்க வந்த முதியவர் - உதவி என கூறி இளைஞர் செய்த செயல்...

x

காரைக்காலில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியவர்களை குறிவைத்து, உதவி செய்வதாகக் கூறி, மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காரைக்காலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தொப்பி அணிந்தபடி வந்த நபர், முதியவருக்கு உதவி செய்வதாகக் கூறி, அதேபோன்ற ஏடிஎம் கார்டை முதியவரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு தெரியாமல் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த முதியவர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுவீன் என்ற நபரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்