திருத்தணியில் கந்த சஷ்டி விழா - சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்

x

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று லட்சார்ச்சனை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சண்முகருக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்றன. விழா நடைபெற உள்ள 6 நாட்களும் லட்சார்ச்சனை பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 18-தேதி மாலை நடைபெறுகிறது. மறுநாள் முருகன் திருக்கல்யாண உற்சவருக்கு திருமணம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்