சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா- வெளியான முக்கிய அறிவிப்பு

x

அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வருகிற 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. தினமும் யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலியபாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. சஷ்டி விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான முருக பக்தர்கள் வருவார்கள் என்பதால், தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்