பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த மக்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார். பின்னர் அவர் புறப்பட்டு சென்ற நிலையில், 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெறவில்லை எனவும், இதனால் கழிவறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயரதிகாரிகள் வரும்போது தங்களை பேச விடுவதில்லை எனவும், அப்போது பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்