ஆறாய் ஓடிய கள்ளச்சாராயம்... வீட்டிலேயே ஜோராக சேல்ஸ்... தொக்காக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவி

x

கடலூர் அருகே பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டார். வேப்பூர் அடுத்துள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி கற்பகம் மீது, மது விலக்கு போலீசாரால் பதியப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர், காலை தனது வீட்டில் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து கொண்டு இருந்ததாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பையில் பாலீத்தின் கவரில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த போது கையும் காளவுமாக பிடிப்பட்டார். அவரிடம் இருந்து நாலரை லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்