வயலுக்கு சென்ற விவசாயி... காலை சுற்றிய காலன்... சடலமாக கிடந்த அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர், மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பெருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர், விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பிற்கு, தண்ணீர் இறைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, அறுந்து கிடந்த மின்சார கம்பி பட்டு மின்சாரம் தாக்கியதில் ஜானகி ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்