ஜெயலலிதா சொத்து.. ஜெ.தீபா அதிர்ச்சி

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து வழக்கில், அவரது சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக, தற்போதைய மதிப்பீட்டை அளவிட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதா சொத்து வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு, கர்நாடகா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசையா சொத்துக்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதாகவும், அவற்றின் தற்போதைய மதிப்பை அளவிட கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதனிடையே ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க, தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்