"ஜன., 6, 7.." - தமிழக அரசுக்கு திடீர் கோரிக்கை | TN Govt

x

புயல் மழையால் 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் சூரமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடக்க உளள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்