`IT'-விரித்த வலை..! 3 இடங்களில் ரெய்டு..கரூரில் பரபரப்பு

x

கரூரில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில், வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரது நிதி நிறுவனம், கேவிபி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என தொடர்ந்து 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நள்ளிரவு வரை சோதனை நடத்திவிட்டு ஓய்வுக்கு சென்ற அதிகாரிகள், மீண்டும் சோதனை நடத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்