பக்கா ப்ளான் போட்டு டிரைவராக வேலைக்கு சேர்ந்து நபர் செய்த பகீர் செயல்

x

பக்கா ப்ளான் போட்டு டிரைவராக வேலைக்கு சேர்ந்து நபர் செய்த பகீர் செயல்

சேலத்தில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து காரை கடத்தி சென்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

சேலம் அழகாபுரம் கென்னடி நகரை சேர்ந்த நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் சக்திவேலிடம், 25 நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுனராக வேலைக்கு சேர்ந்த சக்திகாந்தி என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காருடனும், காரில் இருந்த செல்போன் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடனும் மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கோவையில் பதுங்கி இருந்த சக்திகாந்தியை கைது செய்ததோடு, காரையும் மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்