"சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்கள் ஆனது" | அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்

x

2015-ஆம் ஆண்டில் வெள்ளத்தின் போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்கள் ஆனதாகவும், ஆனால் இம்முறை 3 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட, தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 1,700 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப முன் பணியாளர்கள் தான் காரணம் எனவும், மிக்ஜாம் புயலின் போது பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்....


Next Story

மேலும் செய்திகள்