``பொண்ணு சாம்பலா கிடக்குறா.. குழந்தையில்லாததால எரிச்சிட்டாங்க..` - நெஞ்சு கொதிக்கும் ஏழை தாய்

x

``பொண்ணு சாம்பலா கிடக்குறா.. குழந்தையில்லாததால எரிச்சிட்டாங்க..போலீஸ் முடிஞ்சா என்ன அடிச்சி பாரு` - நெஞ்சு கொதிக்கும் ஏழை தாய்

வரதட்சணை மற்றும் குழந்தையின்மையை காரணம் கூறி இளம்பெண் ஒருவரை கணவர் வீட்டார் சித்ரவதை செய்து கொன்றதாக ஒரு கிராமமே கதி கலங்கி சாலை மறியலில் ஈடுபட்டது திருவண்ணாமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஓகூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கும் விளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்குமிடையே கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், தம்பதிக்கு குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தையின்மையை காரணம் கூறி சந்தியாவை அவரது கணவர் வீட்டார் சித்ரவதை செய்து வந்ததாகவும், வரதட்சனை கேட்டு அவரை அடிக்கடி வீட்டை விட்டு துரத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் குடும்பத்தார் போலீசில் புகாரளித்திருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் திடீரென தன் கணவர் வீட்டில் சந்தியா மண்ணெண்ணெயால் தீக்குளித்து இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தியாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கணவர் வீட்டார் கொலை செய்திருப்பதாகவும் கூறி குற்றம்சுமத்திய ஓகூர் கிராமத்தினர், இது தொடர்பான விசாரணையில் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டு தங்களை மிரட்டி வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்