ஐபிஎல் ரோந்து பணியின்போது சிக்கிய 6 பேர்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

x

மதுரையில், மருது சேனை அமைப்பு தலைவரை வெடி குண்டு வீசி கொல்ல முயன்ற கும்பலை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி துவங்குவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், சந்தேகத்திற்குரிய வகையில் லாட்ஜ்களில் தங்கியிருந்த ஆறு பேரை கைது செய்த திருவல்லிகேணி போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான ஆறு பேரையும்... கடந்த 14 ஆம் தேதி மருது சேனை கட்சித் தலைவர் ஆதி.நாராயணனை மர்மகும்பல் பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில், போலீசார் தேடி வருவது தெரியவந்தது. இந்நிலையில், கைதான மதுரையை சேர்ந்த ஆறு பேரிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அனைவரையும் மதுரை திருமங்கலம் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்