மதுரை மக்களுக்கு குட் நியூஸ் - அண்ணாமலை கூறிய புது தகவல்!

x

திருமங்கலத்தில் நீண்ட கால பிரச்சனையாக உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டிருந்தால்,அதை அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருமங்கலம் அருகே மறவன் குளத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை, பேருந்து நிலையம் அருகே யாத்திரையை நிறைவு செய்தார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, தென்னை, பனை மூலமாக கிடைக்கக்கூடிய எல்லா பொருட்களையும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றார். அதன் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்கும்,என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்