3வது நாளாக நீடிக்கும் இந்தியன் ஆயில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

x

சேலத்தில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியன் ஆயில் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள், 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கருப்பூர் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தின், கேஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு பணிபுரிந்து வந்த 55 ஒப்பந்த பணியாளர்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி, 3வது நாளாக கேஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்