பழனியில் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த ஆளுநர்

x

பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநர், பழனி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது‌. தொடர்ந்து, சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட ஆளுநர், ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த பழனியாண்டவரை தரிசனம் செய்ததுடன், தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, மாவட்ட ஆட்சியர், டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்